பொகவந்தலாவை – வானக்காடு (போன்னகோட்) தோட்டத்தைச் சேர்ந்த 14 வயதான கௌதம் என்ற
சிறுவனைப் பெற்றோர் தேடி வருகின்றனர்.
இராமச்சந்திரன், பரமேஸ்வரி அவர்களின் மகனான கௌதம் கடந்த 11.11. 2017ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 11.11.2017 மாலை வீட்டில் யாரும் இல்லாத சமயம் பாடசாலை பை, சப்பாத்து ஆகியவற்றுடன் காணாமல் போயுள்ளார். கௌதமை பெற்றோர், உறவினர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இதுகுறித்து பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
கௌதம் என்ற இந்த சிறுவனை யாராவது அடையாளம் கண்டால், கீழே உள்ள தொலைபேசி இலக்கத்தில் அவரது பெற்றோருக்கு அறிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
0779613690 / 0763983913
தகவல் : மாமா Kugan
இந்தப் பதிவை பகிர்வது, பிள்ளைக்காக காத்திருக்கும் அந்தத் தாய்க்கு நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும்.