போர்க்குற்ற விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்வாங்கப்படமாட்டர்கள்! : பிரதமர்

0
131

போர்க்குற்றங்கள் தொடர்பில் அமைக்கப்படவுள்ள விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கமாட்டார்கள். அந்த பொறிமுறையில் இலங்கையின் உள்ளுர் நீதிபதிகளே இருப்பார்கள் என்று இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமையன்று அலரிமாளிகையில் இடம்பெற்ற படையதிகாரிகளுடனான சந்திப்பின் போது இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் ஜூன் 13ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு ஆரம்பிக்கும் போது இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் ஆணையாளர் செய்ட் அல் ஹூசைன் தமது நிலைப்பாட்டை வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக ரணில் விக்கிரமசிங்க இந்த சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

அதே நாளன்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவும் இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும்  பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here