கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே உள்ள திருக்காக்கரை பகுதியை சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், குடும்ப தகராறு காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் அந்த வாலிபர், தனது வாட்ஸ் அப்-ல் காட்சி படமாக தன்னுடைய மனைவியின் நிர்வாண படத்தை வைத்துள்ளார். அதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, தனது கணவரின் மீது பெரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், அந்த வாலிபரின் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் மனைவியின் நிர்வாண படத்தை வாட்ஸ்-அப் காட்சி படமாக வைத்தது ஏன்? என்று அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது தனது மனைவிக்கு மற்றொரு ஆணுடன் தொடர்பு உள்ளதாகவும், அந்த நபருடன் உடலில் ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக வீடியோ கால் பேசியதை மறைந்திருந்து ரகசியமாக புகைப்படம் எடுத்ததாகவும், தனது மனைவி மீது உள்ள கோபத்தில் அதனையே தனது வாட்ஸ்-அப் காட்சிபடமாக வைத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிரிந்து சென்ற மனைவி மீதான கோபத்தில் அவரது நிர்வாண புகைப்படத்தை வாட்ஸ்-அப் காட்சி படமாக வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் எர்ணாகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.