மலையகத்தில் சீனாவுக்கு ஆப்பு!

0
167

இலங்கையில் ஆழமாக காலூன்றியுள்ள சீனா, மலையகத்திலும் கால்பதிப்பதற்கு முன்னெடுத்த முயற்சிகைகூடவில்லையென இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

இலங்கையிலுள்ள பிரதான அரச கல்வி நிறுவனமொன்றின் ஊடாக , சீனாவின் எக்சிம் வங்கியுன் உதவியோடு கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவிருந்த திட்டங்களை கைவிடவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றா பாகத்தை நிர்மாணிக்கும் பொறுப்பு ஜப்பான் நிறுவனமொன்றிடம் கையளிக்கப்பட்டுள்ளதாலேயே பீஜிங்குக்கு இந்த நெருக்கடிநிலை உருவாகி, மலையகத்தில் கால்பதிக்கும் முயற்சி கைகூடவில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, தேயிலைத்துறையில் முதலீடுவதற்கு முன்வந்த சீன முதலீட்டாளர்களுக்கு அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஏற்கனவே கதவடைப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here