வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிலையங்கள் பலவற்றில், எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக, வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருக்கின்றது.
எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது.
இந்த நிலையிலேயே பல எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறான திடீர் விலைக் குறைப்புகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களை பொறுத்தவரையில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
ஆகவே, இவற்றில் விலை குறைப்பை ஏற்றுக்கொள்ளாது எரிபொருள் நிலையங்களை திறக்க மறுகின்றனர். மேலும், பொது மக்கள் மீண்டும் எரிபொருளுக்காக வரிசையில் நிற்கும் நிலை தொடருமானால் நிலைமை மிகவும் மோசமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.