முச்சக்கர வண்டி சாரதியை தாக்கி தங்கச்சங்கிலியை கொள்ளையிட்ட யுவதி

0
82

கண்டி அங்கும்புர பள்ளேகம பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.வாடகை பயணம் செல்லும் போர்வையில் முச்சக்கர வண்டியில் ஏறிய இளம் யுவதி, சாரதியில் தலையில் சுத்தியலால் தாக்கி விட்டு, அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தப்பிச் சென்ற யுவதியை கண்டி, அலவத்துகொட பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.கண்டி அங்கும்புர பள்ளேகம பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

யுவதி கொள்ளையிட்ட சுமார் ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட யுவதி இன்று அலவத்துகொட நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here