மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவன் மாயம் – உதவி கோரும் பெற்றோர்

0
93

பதுளை, ஸ்பிரிங்வெளி தோட்ட, நாவலவத்தையில் (4ஆம் பிரிவு) வசித்து வந்த 16 வயதான விவேகானந்தன் ரகுமான் என்ற மாணவன் காணாமல் போயுள்ளார். பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியிலிருந்து இவரைக் காணவில்லை என பதுளை காவல் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

பெத்தேகம பகுதியில் உள்ள சகோதர மொழிப்பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்று வந்த குறித்த மாணவன், சம்பவ தினமன்று பெத்தேகம புராதன மகா விகாரையில் நடைபெற்ற மேலதிக வகுப்பிற்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.

அவர் இறுதியாக சிவப்பு நிற டீ- சேர்ட்டும், நீல நிற நீள காற்சட்டையும் அணிந்திருந்ததுடன், ஊதா நிறப் புத்தகப் பையை கொண்டு சென்றுள்ளார்.

இவர் குறித்த தகவல் அறிந்தோர் 076 0178821, 077 2405245 என்ற அலைபேசி இலக்கங்களுக்கு அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு தந்தை விவேகானந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here