யாழில் வெளிநாடு மோகத்தால் 68 லட்ச ரூபாயை இழந்த இளைஞன்!

0
69

வெளிநாடு அனுப்பி வைப்பதாக 68 இலட்ச ரூபாயை மோசடி செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து இளைஞன் ஒருவரை வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி , ஆசிரியர் ஒருவர் 68 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார்.

பணத்தினை பெற்றவர் நீண்ட காலமாக இளைஞனை வெளிநாடு அனுப்பி வைக்காதமையால், பாதிக்கப்பட்ட இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்,

பணத்தினை பெற்ற ஆசிரியரை கைது செய்து யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , இளைஞனிடம் பெற்ற முழு பணத்தினையும் , இளைஞனிடம் கையளிக்கிறேன் என நீதிமன்றில் கூறி பணத்தினை இளைஞனிடம் மீள கையளித்தார்.

அதனை அடுத்து, ஆசிரியரை பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்று வழக்கினை ஒத்திவைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here