நாட்டில் உள்ள நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை, வருடாந்தம் சுமார் 5,000 புதிய நோயாளிகளால் அதிகரிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குடிநீர் காரணமாக நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாகவும் நாட்டில் உள்ள குடி நீர் பிரச்சினைக்கு இவ்வருட இறுதிக்குள் பூரணமாகத் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதற்காக சர்வதேசத்தின் உதவி பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அவர் மேலும் கூறினார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.