வீட்டில் இருக்கும் திருஷ்டி கழிப்பது எப்படி?

0
66

திருஷ்டி கழிப்பது எப்படி

வீட்டில் எதிர்மறை தீய சக்திகள் அதாவது எதிர்மறை ஆற்றல்கள் இருந்தால் இருந்தால் அவற்றை திருஷ்டி என்கிறார்கள். வீட்டில் திருஷ்டி ஏற்பட்டிருந்தால் கஷ்டங்கள், பொருளாதார இழப்புகள், மன சஞ்சலம் போன்றவை ஏற்படும். வீட்டில் நிம்மதி என்பதே இருக்காது. இவ்வாறு வீட்டில் ஏற்பட்டிருக்கும் திருஷ்டி தோஷத்தைப் போக்க முன்னோர்கள் பல வழிமுறைகளை சொல்லி வைத்துள்ளனர். கீழ்கண்ட பரிகாரங்கள் செய்வதன் மூலம் திருஷ்டி கழிவதுடன் வீட்டில் இருந்து பல்வேறு நச்சுக்களும் வெளியேறுவதாக நம்பப்படுகிறது.

வீட்டில் திருஷ்டி கழிப்பது எப்படி

திருஷ்டி கழிக்கும் முறைகள்
அமாவாசை, பவுர்ணமி போன்ற முக்கிய தினங்களில் உச்சிவேளையில் வீட்டிற்கு திருஷ்டி கழிக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் காலை 6 மணி அல்லது மாலை 6 மணிக்கு திருஷ்டி கழிக்கலாம்.

தண்ணீரில் சிறிது மஞ்சள் கலந்து அதனுடன் வேப்பிலை சேர்த்து வீட்டின் அனைத்து பகுதிகளிலும் அந்த நீரை தெளிக்க வேண்டும். மஞ்சளும் வேப்பிலையும் மிகச் சிறந்த கிருமி நாசினியாகும்.

கடல் நீரை கொண்டு வீட்டை கழுவி விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் விலகும். எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றின் மேல் குங்குமம் பூசி திருஷ்டி சுற்றி வீசி எறியலாம்.

ஆகாச கருடன் கிழங்கை எடுத்து அதில் மஞ்சள் சந்தனம் குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம். ஆகாச கருடன் கிழங்கு வீட்டில் உள்ள தீய சக்திகளை வெளியேற்றும் என நம்பப்படுகிறது.

அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை மாலை என இருவேளையும் சாம்பிராணி தூள், கருவேலம்பட்டை தூள், வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீட்டில் தூப தீப புகை காட்டினால் அனைத்து வகையான திருஷ்டிகளும் தீய சக்திகளும் வீட்டை விட்டு வெளியேறும் என்பது நம்பிக்கை.
செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமைகளில் பூசணிக்காயை வைத்து வீட்டில் திருஷ்டி சுற்றி போடலாம்.

கிரகபிரவேச சமயங்களில் வீட்டில் பசுவையும், கன்றையும் வீட்டிற்கு அழைத்து வருவதை பார்த்திருப்போம். கோமாதா வீட்டிற்குள் வந்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அது போல திருஷ்டி இருக்கும் வீட்டில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பசுவை வீட்டிற்கு அழைத்து வந்து கோபூஜை செய்தால் அந்த இல்லத்தில் இருக்கும் கிரக தோஷங்களும், திருஷ்டிகளும் நீங்கும்.
அதே போல வருடத்திற்கு ஒரு முறை வீட்டில் கணபதி ஹோமம் செய்யலாம். இதனால் அனைத்து திருஷ்டிகளும் கழிந்து வீடு சுபிட்சமடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here