அடுத்த வாரம் முதல் விசேட சுற்றிவளைப்புகள்

0
103

பண்டிகை காலத்தில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பொருட்களை பதுக்கி வைப்போரை தேடி விசேட சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

பிரதேச ரீதியில் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு இந்த விடயங்கள் தொடர்பில் தௌிவுபடுத்தப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரிஎல்ல தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் முதல் இந்த செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here