இலங்கை அதிபரின் பொது மன்னிப்பில் யாழ் சிறையில் இருந்தும் கைதிகள் விடுதலை!

0
118

கிறிஸ்தவர்களின் பண்டிகையான நத்தார் தினத்தை முன்னிட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய நாடாளாவிய ரீதியில் 309 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

அந்தவகையில், சிறு குற்றச் செயல்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்தாமை போன்றவற்றால் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சிலரும் விடுதலை செய்யப்பட்டனர்.

நத்தார் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கைதிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) விடுதலை செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here