உறங்கிக் கொண்டிருந்தபோது முகத்தில் வௌவால் கடித்ததால் 11 வயது சிறுவன் பலி – கனடாவில் சோகம்!

0
8
dailymirror.lk

கனடாவின் ஒன்டாரியோ (Ontario) பகுதியில், உறங்கிக் கொண்டிருந்தபோது முகத்தில் வௌவால் கடித்ததால் 11 வயது சிறுவன் ஒருவன் ரேபிஸ் (Rabies – வெறிநாய்க்கடி) நோய்த்தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த சோகமான சம்பவம் மருத்துவ அறிக்கையொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டில், இச்சிறுவன் தனது குடும்பத்தினருடன் ஒன்டாரியோவில் உள்ள விடுமுறை இல்லம் ஒன்றிற்குச் சென்றிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிறுவன் தூங்கிக்கொண்டிருந்தபோது அவனது மூக்கு மற்றும் வாய் பகுதியில் வௌவால் ஒன்று அமர்ந்துள்ளது.

உடலில் காயங்கள் எதுவும் தெரியாததாலும், வௌவாலின் நடத்தையில் மாற்றம் இல்லாததாலும் அவனது பெற்றோர் உடனடியாக மருத்துவ உதவியை நாடவில்லை.

ஆனால், 19 நாட்களுக்குப் பிறகு சிறுவனின் முகத்தில் வீக்கமும் உணர்ச்சியற்ற தன்மையும் ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அவனுக்கு, ஆரம்பத்தில் சாதாரண நரம்புப் பாதிப்பு என தவறாகக் கருதப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

பின்னர் காய்ச்சல், விழுங்குவதில் சிரமம் மற்றும் மாயத்தோற்றங்கள் போன்ற தீவிர அறிகுறிகள் தோன்றியதை அடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில், அவனுக்கு ரேபிஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தச் சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கனடிய மருத்துவ சங்க இதழ் (Canadian Medical Association Journal) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் 1924 ஆம் ஆண்டிற்குப் பிறகு தொற்றால் உயிரிழந்த 28 ஆவது நபர் இவராவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here