“என் கனவை விஜய் நிறைவேற்றியுள்ளார்”- எஸ்.ஏ.சந்திரசேகர் பெருமிதம்

0
15
Photo - indiatoday News - dailythanthi

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி, பிற கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்த விஜய், நேற்று நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் தமிழகத்தின் முதல்-அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முதல்-அமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாவது:- “என் கனவை விஜய் இன்றைக்கு நிறைவேற்றியுள்ளார். இது எல்லா அப்பாக்களுக்கும் கிடைக்காது. நடிகராக உச்சத்தில் இருந்த சமயம், அதை விட்டு மக்களுக்காக அரசியலுக்கு வந்தார். இடையில் அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. அதையெல்லாம் மீறி, இன்றைய தின பதவியேற்பு விழாவில் ‘ஜோசப் விஜய் ஆகிய நான்…’ என்று அவர் சொல்லும்போது, நான் நெகிழ்ந்து போனேன்”, என்று குறிப்பிட்டார்.

அவரது தாயார் ஷோபா கூறுகையில், “ஒரு தாயாக இதைவிட வேறு என்ன பெருமை இருந்து விட முடியும்? அன்னையர் தினத்தில் இதைவிட ஒரு மகன் என்ன பரிசு தந்துவிட முடியும்?. சிறுவயதில் இருந்தே நினைத்ததை நடத்தி முடிக்கும் திறன் கொண்டவர் விஜய். சினிமாவில் சாதித்து, மக்களுக்காக பணி செய்ய நினைத்து அரசியலுக்கு வந்தார். மக்கள் அவரை கோபுரத்தில் வைத்திருக்கிறார்கள். அவர் நினைத்தது நல்லபடியாக நடக்கும். மக்களுக்காக அவர் சிறப்புடன் செயலாற்ற இறைவனின் ஆசிர்வாதமும், மக்களின் ஆதரவும் அவருக்கு நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here