எபோலா தொற்று – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0
4
thamilan

மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ குடியரசில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் எபோலா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000யை கடந்துள்ளது.

அரசு தரவுகளின்படி, கடந்த மே மாதம் மத்தியில் பரவத் தொடங்கிய இத்தொற்றால் இதுவரை 6,186 பேர் பாதிக்கப்பட்டு, அவர்களில் 3,007 பேர் உயிரிழந்தனர்.

கொங்கோவில் தற்போது பரவி வரும் ‘புண்டிபுக்யோ’ வகை எபோலா தீநுண்மிக்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையோ, தடுப்பூசியோ ஏதுமில்லை.

இருப்பினும், எபோலாவுக்கு சிகிச்சையளிக்க உதவும் எர்வெபோ தடுப்பூசி, இந்தத் தீநுண்மிக்கு எதிராகவும் ஓரளவு பாதுகாப்பை அளிக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அதன்படி, சுகாதாரப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி முதல்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது.

நோய் பரவல் உச்சத்தில் இருக்கும் இத்தகைய சூழலிலும் பாடசாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், குழந்தைகளுக்கும் தொற்று வேகமாக பரவக்கூடும் என்ற அச்சம் தீவிரமடைந்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here