காணித் தகராறு தம்பிக்கு அண்ணன் செய்த கொடூரம்- புத்தல பகுதியில் சம்பவம்

0
69

இரு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட காணித்தகராறில் தம்பியின் தலையை அண்ணன் உடைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று மொனராகலை – புத்தல பொலிஸ் பிரிவிட்கு உட்பட்ட யுதஹனாவ- பன்சல வீதி பிரதேசத்தில், இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

சாதாரணமாக இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், கரும்பு வெட்டும் கத்தியால் தம்பியின் தலையை அண்ணன் வெட்டியுள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சகோதரர்கள் இருவரும் தமது பெற்றோரின் தான நிகழ்வுக்காக மற்றுமொரு சகோதரியின் வீட்டுக்குச் சென்றிருந்த போதே, இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் காயமடைந்த இருவரும் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, தம்பி ​மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை வைத்தியசாலைக்கும் பின்னர் பதுளை வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருவதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here