குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை இலக்கு வைத்து சிறுநீரக விற்பனை..!

0
75

கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை இலக்கு வைத்து சிறுநீரகங்களை பணத்திற்கு வாங்கி வேறு நபர்களுக்கு விற்பனை செய்யும் மோசடி இடம்பெற்றுள்ளது.

பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இந்த மோசடி இடம் பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது

இதன்படி, அந்த வைத்தியசாலையின் உறுப்பு மாற்று சத்திரசிகிச்சைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் ஆலோசனைக்கமைய விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது..

மேலும், இந்த மேசடி தொடர்பில் பொரளை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், விசாரணைகள் நேற்று(25) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, சிறுநீரக தானம் செய்பவர்கள் குழுவொன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதோடு இதேவேளை, சிறுநீரகக் கடத்தலுக்கு உதவிய பிரதான காவல்துறை தொடர்பிலும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இற்த விசாரணைக்கமைய, “மோசடி விசாரணைப் பிரிவில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்ட நாள் முதல் சுகயீன விடுமுறையில் பணிக்கு திரும்பவில்லை. குறித்த அதிகாரி இதற்கு முன்னரும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மோசடி விசாரணைப் பிரிவின் கடமைகளில் இருந்தும் அவரை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுநீரகக் கடத்தலின் பிரதான தரகராக மோதரை காஜிமாவத்தையைச் சேர்ந்தவர். நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழும் குடும்பங்களைத் தொடர்பு கொண்டு சிறுநீரகங்களைப் பெற்றுக் கொள்வதற்காக குறித்த நபர் வேறொரு தரகரால் அமர்த்தப்பட்டுள்ளார்.

தலா பத்து இலட்சம் ரூபாவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கஜிமாவத்தை, தொட்டலங்கை மோதரை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த ஆறு பேரை குறித்த நபர் இணைத்துள்ளார்.

சிறுநீரகம் தானம் செய்யும் போது சம்பந்தப்பட்டவர்கள் கிராம உத்தியோகத்தர்களின் சான்றிதழ்களை பெற வேண்டியதன் பின்னணியில் வைத்தியசாலையின் ஒரு குழுவினர் போலியான சான்றிதழ்களை தயாரித்து வழங்கியுள்ளனர்.

இதேவேளை, தமக்கு சிறுநீரகத்திற்காக 50 முதல் 120 இலட்சம் ரூபா வரை பணம் வழங்கப்படுவதாக வாக்குறுதியளித்ததாகவும், இருப்பினும் கூறியது போன்று பணம் வழங்கப்படவில்லை எனவும் சிறுநீரகத்தை வழங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here