கொழும்பில் நீண்ட நேர நீர்வெட்டு தொடர்பில் அறிவிப்பு!

0
114

கொழும்பு மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் நாளை(03) காலை 8 மணி முதல் நாளை மறுதினம் (செப்.04) அதிகாலை 2 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.

இதன்படி, கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே, கடுவளை மாநகர சபை அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபை அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகள், இரத்மலானை, கட்டுபெத்த ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு 18 மணிநேர மின்வெட் அமுல்படுத்தப்படவுள்ளது.

அம்பதலே நீர் விநியோக கட்டமைப்பு பகுதிகளில் ஏற்பட்டுள்ள அவசர மின்சார திருத்த நடவடிக்கைகள் காரணமாக, நீர்வெட்டை அமுல்படுத்தப்பட வேண்டிய காட்டயம் ஏற்பட்டதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here