நேட்டோ (NATO) அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்கச் செய்வதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார்.
துருக்கியின் அங்காரா (Ankara, Turkiye) நகரில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னதாக, டிரம்ப்புடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போது இதனைத் தெரிவித்ததாக கார்னி குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் அச்சுறுத்தல்கள் காரணமாக, உறுப்பு நாடுகள் தங்களின் பாதுகாப்புப் பொறுப்பை உணர்ந்துள்ளதாகவும், பாதுகாப்புச் சுமையை பகிர்ந்துகொள்வது பொருத்தமானது என்றும் அவர் கூறினார்.
தற்போது கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.4 சதவீதத்தை பாதுகாப்பிற்கு செலவிடுவதாகவும், இந்த தசாப்தத்தின் முடிவிற்குள் அது 4 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் கார்னி உறுதியளித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதல் திட்டம், ஆர்க்டிக் இராணுவத் தொடர்புக்கான செயற்கைக்கோள் ஒப்பந்தம் மற்றும் ஏவுகணை கொள்முதல் உள்ளிட்ட பல பாதுகாப்பு முதலீடுகளை கனடா அறிவித்துள்ளது.
அத்துடன், லாட்வியாவில் (Latvia) உள்ள கனடிய இராணுவப் பணியை 2031 வரை நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.




