தண்ணீர் வாளிக்குள் விழுந்து உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை

0
79

பொன்னாலை மேற்கு பகுதியில் ஒன்றரை வயது குழந்தை ஒன்று தண்ணீர் வாளிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளது.

சம்பவம் குறித்து தெரிய வருகையில்,

இன்று திங்கட்கிழமை மதியம் தாயார் சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை குழந்தை முற்றத்தில் இருந்த தண்ணீர் வாளிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளது.

தாயார் சமையல் வேலைகளை முடித்துவிட்டு குழந்தையை தேடியவேளை குழந்தையை காணவில்லை.

இதன்போது தாயாரும் அயலில் உள்ளவர்களும் சேர்ந்து குழந்தையை தேடியவேளை குழந்தை தண்ணீர் வாளியினுள் வீழ்ந்திருந்தது அவதானிக்கப்பட்டது.

இதனையடுத்து, குழந்தையை மீட்ட அயலில் உள்ளவர்கள் மூளாய் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றவேளை குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளது மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது.

யசோதரன் யஸ்மிகா என்ற ஒன்றரை வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குழந்தையின் சடலம் தற்போது மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here