திங்களன்று வற் வரி தொடர்பில் விசேட திருத்தம்! : ஜனாதிபதி

0
110

நாட்டு மக்­களின் நலனை கருத்­திற்­கொண்டு திங்­கட்­கி­ழமை முதல் வற் வரி விதிப்பில் விசேட திருத்தமொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வித்­துள்ளார்.

பதுளை கிராந்­து­ரு ­கோட்டை மகா­வலி விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நடை­பெற்ற சிறு­நீ­ரக நோய் ஒழிப்பு வேலைத்­திட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அங்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேலும் உரை­யாற்­று­கையில்,

நாட்டின் கடன் சுமை­யி­லி­ருந்து மீளும் வகையில் அர­சாங்­கத்­தி­னால் புதிய வற்­வ­ரி­களை அறிமுகப்படுத்த வேண்­டி­யேற்­பட்­டது.   இருந்­த­போ­திலும் வற் வரி விதிப்­புகள் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் நாட்டின் சாதா­ரண பொது­மக்­களின் அன்­றாட வாழ்­கையில் பெரும் அசௌ­க­ரி­யங்­களைக் எதிர்­கொண்­டுள்­ளனர்.

எனவே பொது­மக்­களின் அசௌ­க­ரித்தை கருத்­திற்­கொண்டு மக்­க­ளுக்கு நிவா­ரணம் அளிப்­ப­தற்கு திட்­ட­மிட்­டுள்ளேன்.   இதன்­பி­ர­காரம் திங்­கட்­கி­ழ­மை­யன்று விசேட வரி திருத்தம் செய்­ய­வுள்ளேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here