தெற்கு ஈக்வடாரில் நிலநடுக்கம்: குறைந்தது 13 பேர் பலி என தகவல்!

0
98

தெற்கு ஈக்வடாரில் நேற்று (18.03.2023) சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகிய நிலையில் குறைந்தது 13 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் தெற்கு நகரமான பாலோவுக்கு அருகில் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க தேசிய வானிலை சேவையின்படி, அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை குறித்த எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here