நெருக்கடிக்கு காரணமான தரப்பினரை அரசாங்கம் பாதுகாக்கின்றது – அனுர குற்றச்சாட்டு

0
100

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு காரணமான தரப்பினரை வெளிப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது என தேசிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.

பொலன்னறுவையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.

நெருக்கடி குறித்து அரசாங்கம் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு வருகின்ற போதிலும், இதுகுறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தவில்லை என அவர் தெரிவித்தார்.

உணவு நெருக்கடி, கடினமான காலங்கள் வரவுள்ளதாக ஆட்சியாளர்கள் எச்சரித்த போதிலும், நெருக்கடிகளுக்குப் பின்னால் உள்ள தனிநபர்கள் பாதுகாக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் நெருக்கடியானது தானாக ஏற்படவில்லை இதற்கு ஆளும் கட்சியே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

மோசமான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நாட்டின் அரசியல் கலாச்சாரம் ஆகியவை நிலவும் நெருக்கடிக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here