நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் – ஜனாதிபதி

0
85

இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியிலிருந்து தேசிய கட்சிகளின் அர்ப்பணிப்பு அவசியமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்அதற்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 மாநாடு பிலிப்பைன்ஸ் மணிலா நகரில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.இந்த நிலையில் குறித்த மாநாட்டு தலைமைதாங்கி உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்

இதேவேளை உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிலிப்பைன்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த நாட்டு ஜனாதிபதியை சந்தித்து கலந்தரையாடியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிலிபைன்ஸ் ஜனாதிபதி பேர்டினட் மார்க்கஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பிலிபைன்ஸின் மணிலா நகரிலுள்ள மலாகானாங் அரண்மனையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here