படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

0
91

கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் முதல் தடவையாக ஒரு மாதத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000ஐத் தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.நாட்டின் சுற்றுலாத்துறை ஒருவித விழிப்புணர்வை நோக்கி நகர்வதையே இது காட்டுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.நவம்பர் 1ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை 51865 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

கடந்த ஏப்ரலில் 62,980 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், 50,000 ஐ தாண்டியது இதுவே முதல் தடவையாகும். அதன்படி இதுவரை 620123 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here