பாடசாலை நாட்களை மட்டுப்படுத்துவது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுவருகின்றது
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் தொழிற்சங்கத்தினருக்கிடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எரிபொருள் நெருக்கடி காரணமாக மாணவர்கள் பாடசாலைக்கு வருகைதருவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில் பாடசாலை நாட்களை மட்டுப்படுத்துவது தொடர்பிலான முன்மொழிவுகள் ஏற்கனவே கல்வி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.