பாடசாலை மாணவியின் அரை நிர்வாண படங்களை வெளியிட்ட பெண் கைது!

0
143

பாடசாலை சிறுமியின் அரை நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்ட பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (29) காலை மகளிர் காவல்துறை மற்றும் சிறுவர் பணியக அதிகாரிகள் சந்தேகநபரான பெண்ணை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள பெண் உலகளாவிய ரீதியில் இயங்கும் அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றின் அங்கத்தவர் என்பதுடன் மனித உரிமைகள் அமைப்பு ஒன்றின் தேசிய ஊடகப் பணிப்பாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுமியின் அரை நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக கூறி சிறுமியின் குடும்பத்தினரை அச்சுறுத்திய அவர் பின்னர் அவற்றை சமூக வலைத்தளங்களில் வௌியிட்டுள்ளதாகவும் அவரது தாயார் காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கைது செய்த சிறுவர் பணியக அதிகாரிகள் அவரை புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

குறித்த சிறுமி தற்போது கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றுவதாகவும், இந்தச் சம்பவத்தின் மூலம் சிறுமி கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here