றொரண்டோ ஸ்டேடியத்தில் (Toronto Stadium) நடைபெற்ற பிபா உலகக் கோப்பை (FIFA World Cup) போட்டியின் போது, பொலிஸாரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஜெர்மனியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடா (Canada) மற்றும் போஸ்னியா-ஹெர்சகோவினா (Bosnia and Herzegovina) அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு சற்று முன்னர், மைதானத்தின் பார்வையாளர் பகுதியில் மோதல் வெடித்தது.
கலவரத்தில் ஈடுபட்ட ரசிகர் ஒருவரை வெளியேற்ற முயன்ற காவல்துறையினர் மீது அங்கிருந்தவர்கள் பொருட்களை வீசித் தாக்கினர். இச்சம்பவத்தில் இரண்டு அதிகாரிகள் லேசான காயமடைந்தனர்.
போஸ்னிய ரசிகர் குழுவைச் சேர்ந்த ஜெர்மனியை வசிப்பிடமாகக் கொண்ட எல்டார் கிராபோவாக் (Eldar Grabovac – 27) மற்றும் எமிர் கோலிக் (Emir Colic – 25) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர்கள் இருவரும் ஜூன் 13, 2026 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
உலகக் கோப்பையைப் பாதுகாப்பாக ரசிக்குமாறும், சட்டத்தை மீறினால் போட்டியைப் பார்க்க முடியாமல் சிறை செல்ல நேரிடும் என்றும் றொரண்டோ பொலிஸ் அசோசியேஷன் (Toronto Police Association) எச்சரித்துள்ளது.




