பிரதமராக பதவியேற்க தற்போதும் தயாராகவே இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு சர்வதேச ரீதியில் நிலையான சட்டரீதியாகத் தீர்வு காண ஐக்கிய மக்கள் சக்தியினாலேயே முடியும் என்றும் குறிப்பிட்டார்.