பிரிந்த மனைவி~மந்திரவாதியை நாடிய கணவர்~பின்னர் நடந்த பயங்கரம்..!

0
108

மந்திரவாதி ஒருவர் மனைவியை சேர்த்து வைப்பதாக பணம் வாங்கி கொண்டு மனைவி திரும்ப வராததால் ஆத்திரத்தில் மந்திரவாதியை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒடிசா மாநிலம் ஜெய்ஜ்பூர் மாவட்டம் பண்டாஹரொன் பகுதியை சேர்ந்தவர் சாந்தனு பிஹிரா(40). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது.

இதனிடையே அடிக்கடி, சாந்தனுவுக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்று இருக்கிறார்.

கடந்த 3 மாதங்களாக அவர் தனது அம்மா வீட்டில் இருந்துள்ளார். இதனையடுத்து, மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க உதவுமாறு மனியா பாபர் ( 47) என்ற மந்திரவாதியிடம் சாந்தனு கேட்டுள்ளார்.

இதற்காக ரூ.5 ஆயிரம் தரும்படி மனியா கூறவே அந்த பணத்தை சாந்தனு கொடுத்துள்ளார். இந்த நிலையில், மந்திரவாதி உறுதியளித்தப்படி, அம்மா வீட்டிற்கு சென்ற மனைவியை மீண்டும் சேர்த்து வைக்காததால் கொடுத்த ரூ.5 ஆயிரம் பணத்தை திருப்பி தரும்படி சாந்தனு கேட்டுள்ளார்.

அப்போது, சாந்தனுவுக்கும் மந்திரவாதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்பின் வாக்குவாதம் முற்றிய நிலையில், சாந்தனு தான் மறைத்துவைத்திருந்த கத்தியை கொண்டு மந்திரவாதி மனியாவை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சாமியார் மனியா பாபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மந்திரவாதி என கூறப்படும் மனியா பாபர் மராட்டியத்தை சேர்ந்தவர் நெபதும் அவர் தனது மனைவியுடன் வாடைகை வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது. பின், மந்திரவாதி மனியாவை கொலை செய்த சாந்தனு போலீசில் சரணடைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here