புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்!

0
87

புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இந்த ஆண்டு அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதாவது பரீட்சை அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களின் வருகைப் பதிவுகளை கொண்ட முறைமை ஒன்று செயற்படுத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here