மோதலுக்கு யாழ். பல்கலைக்கழக அதிகாரிகளே பொறுப்புக்கூற வேண்டும்! – மனோ

0
116

யாழ். பல்கலைக்கழக மோதல் சம்பவத்துக்கு பல்கலைக்கழக அதிகாரிகளே பொறுப்புக்கூற வேண்டியவர்கள் எனஅமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“யாழ். பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டமைக்கு பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகளே பொறுப்புக்கூற வேண்டும். இந்த சம்பவம் தொடர்பில் நான் மிகவும் வருத்தமடைகின்றேன்.

இவ்வாறான சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை. இனவாதம், கடும்போக்குவாதம் என்பவற்றை பரப்பி மீளவும் பீதியை ஏற்படுத்த நாம் இடமளிக்க கூடாது.

இவ்வாறான சம்பவங்களினால் தேசிய ஒற்றுமைக்கோ, நல்லிணக்கத்திற்கோ பாதிப்பு ஏற்பட இடமளிக்க முடியாது.

குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிடமும், பொலிஸ் ஆணைக்குழுவிடமும் முறைப்பாடு செய்துள்ளேன்.

குறித்த ஆணைக்குழுக்களின் கிளைகள் யாழ்ப்பாணத்திலும் உள்ளதால் விசாரணை நடத்தி உரிய அறிக்கை வழங்குவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன் என்ற குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here