யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த இரு பெண்கள் போலி ஆவணங்கள் மூலம் 12 கோடி ரூபா பண மோசடி செய்த நிலையில் கைது பொலிசார் கைது செய்துள்ளனர்.
நாவாந்துறைக்கு கொரும்பில் இருந்து இரகசிய புலனாய்வுப் பிரிவு பொலிசாரே நேற்றைய தினம் இரு பெண்களையும் கைது செய்துள்ளனர். இதன்போது 30 மற்றும் 34 வயதுப் பெண்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு தொகுதி நகை மற்றும் பணமும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.