ராகம வைத்தியசாலையில் கைபேசி வெளிச்சத்தில் நோயாளர்களுக்கு சிகிச்சை

0
87

கொழும்பு ராகம போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக வைத்தியர்கள், நோயாளிகள் உட்பட பலரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மின் உற்பத்தி இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று (31) திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இதனால் இரவு 9.30 மணியளவில் மருத்துவர்கள் கையடக்கத் தொலைபேசி ஒளியைக் கொண்டு நோயாளிகளை பரிசோதித்துள்ளனர்.

சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் மின்சார விநியோகம் சீரமைக்கப்பட்டதாகவும் மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here