கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நாட்டில் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் போலி ஆவணங்கள் மூலம் இந்த சட்டவிரோத செயற்பாடு இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரகத்தை வழங்கிய சிலருக்கு பணம் கூட வழங்கப்படவில்லை என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது