வாய் துர்நாற்றம் நீங்க நிரந்தர தீர்வு

0
84

வாய்துர்நாற்றம் பாதிப்பு இன்று பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனையாகும். இதனால் தனது நெருங்கிய துணையுடன் கூட பேச முடியாமல் சங்கடத்திற்கு உள்ளாகின்றனர். சிலருக்கு வாய் சுகாதாரமாக இருந்தாலும் உண்ணும் உணவில் உள்ள ஒருசில பொருட்கள் வாய் துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க, என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறதுதேவையானவை
எலுமிச்சை – 2
வெதுவெதுப்பான நீர் – 1 கப்
பட்டை பொடி – 1/2 ஸ்பூன்
சோடா உப்பு – 1 ஸ்பூன்
தேன் – 1 ஸ்பூன்

செய்முறை
ஒரு பாட்டிலில் எலுமிச்சை சாறு, பட்டை பொடி, சோடா உப்பு மற்றும் தேன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பிறகு அதனுடன் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, நன்கு குலுக்க வேண்டும்.
பின்பு அதில் 1 – 2 மேசைக்கரண்டி அளவு வாயில் ஊற்றி, ஒரு நாளைக்கு பலமுறை வாயைக் கொப்பளித்து வந்தால், வாய் துர்நாற்றம் நீங்கும்.
காரணம், இதில் சேர்க்கப்பட்டுள்ள பட்டை, வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி கொண்டது.

தேனில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளது. இதுவும் வாயில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடும்.
சோடாவில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகளை அகற்றும்.

எலுமிச்சையிலும் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. அதுமட்டுமின்றி, எலுமிச்சை நல்ல நறுமணத்துடன் இருப்பதால், இது வாய் கிருமிகளை அழித்து, வாயை புத்துணர்ச்சியுடனும் துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ளும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here