ஹட்டன் பகுதியில் மண்ணெண்ணைக்காக நீண்ட வரிசையில் நின்று இன்றும் ஏமாற்றத்துடன் மக்கள் வீடு திரும்பினர்.

0
125

ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள இலங்னை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எண்ணை நிரப்பு நிலையத்தில் இன்று (11) திகதி பொது மக்கள் அதிகாலை நான்கு மணி முதல் மண்ணெண்ணை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் நின்று பொலிஸார் மண்ணெண்ணை இன்று பெற்றுக்கொடுக்கப்பட மாட்டாது என தெரிவித்ததனையடுத்து பொது மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
ஹட்டன் பிரதேசத்தில் வாழும் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் இன்று மண்ணெண்ணை வரும் என்று எண்ணி காலை முதல் வரிசையில் நின்றிருந்தனர் பல மணித்தியாலங்களுக்கு பின் பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் இன்று மண்ணெண்ணை பெற்றுக்கொடுக்கப்பட மாட்டாது என தெரிவித்தனர்.

இது குறித்த எண்ணை முகவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் மண்ணெண்ணை எப்போது வரும் டீசல் எப்போது வரும் அல்லது பெற்றோல் எப்போது வரும் என்று எங்களுக்கு முன்கூட்டி அறிவிப்பதில்லை.வரும் பொழுதான் எங்களுக்கு அறிவிக்கிறார்கள் அதனால் எங்களுக்கு உரிய நாளில் வாருங்கள் என்று மக்களுக்கு தெரிவிக்க முடியாது. இன்று ஹட்டன் பகுதியில் மூன்று பெற்றோல் நிரப்பு நிலையங்கள் உள்ளன அவற்றில் எதிலும் மண்ணெண்ணை வழங்கப்படுவதில்லை.

காரணம் மண்ணெண்ணை பெற்றுக்கொடுப்பதன் மூலம் லாபம் கிடையாது.அதனால் தான் அவர்கள் அதனை செய்வதில்லை. இதனை நாங்கள் மக்கள் சேவையாக நினைத்தே செய்து வருகிறோம்.மண்ணெண்ணை வழங்கும் போது நீண்ட நேரம் பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது அத்தோடு இதற்கு நாங்கள் இரண்டு பேரையாவுது நிறுத்த வேண்டும் இவர்களுக்கு வழங்கும் சம்பளம்,பெற்றோல் டீசல் வழங்க முடியாது அதனால் ஏற்படும் சிரமங்கள் ஆகியவற்றினை கருத்தில் கொள்ளும் போது இது ஒரு பாரிய நஸ்ட்டமான காரியமாகவே காணப்படுகின்றது.

இதே நேரம் மக்களுக்கு மண்ணெண்ணை பெற்றுக்கொடுப்பதற்கு நாங்கள் மக்களுக்கு பொறிமுறை ஒன்றினை அமைத்து கொடுக்க முடியாது காரணமாக மக்கள் எங்களிடம் சண்டைக்கு வருகிறார்கள் அரசாங்கம் தான் அதற்கு வேலைத்திட்டங்களை முன்வைக்க வேண்டும். இன்று மக்கள் நீண்ட நேரம் நின்றுவிட்டு எண்ணை இல்லை என்று தெரிந்ததும் போராட்டம் செய்து ஊழியர்களை தகாத வார்த்தைகளில் ஏசி முகநூலிலும் பல்வேறு பதிவுகளை இட்டு எம்மை மன வேதனைக்கு உள்ளாக்குகிறார்கள்.

இவ்வாறு தொடர்ந்தும் செய்தால் நாங்களும் கவலையுடனேனும் மண்ணெண்ணை விநியோகத்தினை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.
இது குறித்து பொதுமக்கள் மற்றும் உத்தியோகஸ்த்தர்கள் கருத்து தெரிவிக்கையில்.

இன்று நாட்டில் கேஸ் இல்லை மண்ணெண்ணை இல்லை நாங்கள் தற்போது மண்ணெண்ணை அடுப்பில் சமைத்து வருகிறோம். எங்களுக்கு விறகு அடுப்பு வைப்பதற்கு கூட இடமில்லை மண்ணெண்ணையும் இல்லை என்றால் நாங்கள் எப்படி சாப்பிடுவது எங்களது குழந்தைகளுக்கு எவ்வாறு உணவு சமைத்து கொடுப்பது.இன்றைய நிலையில் எப்போது எண்ணை வரும் என்று எவருக்கும் தெரியாத நிலையே காணப்படுகின்றது. இதனால் நாங்கள் ஒவ்வொரு நாளும் எண்ணைக்காக பல மணித்தியாலங்கள் வரிசையில் நின்று எண்ணை பெற்றுக்கொள்ள முடியாது வீடு செல்கிறோம்.

ஒரு சிலர் மண்ணெண்ணை வரும் போது குடும்பத்திலுள்ள ஐந்து ஆறு பேர் நின்று தங்களுக்கு தேவைக்கு அதிகமாகவும் சிலர் விற்பனை செய்வதற்காகவும் பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் பெறா முடியாதவர்கள் தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றன.ஆகவே அரசாங்கம் என்ற வகையில் கிராம சேவகர் ஊடாகவோ அல்லது வேறு எந்த வழியிலோ மின்சார பட்டியலோ அல்லது வாக்காளர் இடாப்பை பயன்படுத்தியோ எல்லோருக்கும் பெற்றுக்கொள்ளும் வகையில் ஒரு பொறிமுறையினை அமைத்து உடன் நடைமுறைபடுத்த வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இது குறித்து அரச ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில் மண்ணெண்ணை பெற்றுக்கொள்வது என்றால் இன்று தொழிலுக்கு செல்ல முடியாத நிலையே காணப்படுகின்றன. தொழிலுக்கு சென்ற போது மண்ணெண்ணை வழங்கினால் வந்து வரிசையில் நின்றால் நிரப்பு நிலையத்தினை அண்மிக்கும் போது மண்ணெண்ணை முடிந்து விடுகிறது.இதனால் சமையல் செய்வதில் பாரிய சிக்கல் நிலைகள் உள்ளன. இன்று பெற்றோலுமில்லை தொழிலுக்கு செல்ல முடியாத நிலையே காணப்படுகின்றன.ஆகவே இதற்கு தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் உரிய நடவடிக்கை எடுத்து சரியான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் தொழிலினை கூட செய்ய முடியாத நிலை ஏற்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

எது எவ்வாறான போதிலும் மக்களுக்கு சரியான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டியது ஆட்சியாளர்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் கடமையும் பொறுப்பும் ஆகும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here