2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை ஆரம்பம்!

0
144

இலங்கை பூராகவும் 2021 ஆம் ஆண்டு தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சையானது 22.01.2022 அன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. சுமார் மொத்தமாக 3 இலட்சத்து 40 ஆயிரத்து 508 பேர் மாணவர்கள் பரிட்சைக்கு தோற்றவுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக 108 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 2,943 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறுகிறது.

இந்த பரீட்சையில் தமிழ் மொழியில் 85 ஆயிரத்து 446 பேரும், சிங்கள மொழி மூலம் 2 இலட்சத்து 55 ஆயிரத்து 63 பேரும் தோற்றியுள்ளனர்.

புலமை பரிசில் பரீட்சைக்கான முதலாவது வினாத்தாளுக்கான பரீட்சை காலை 9.30 இலிருந்து 10.15 வரைக்குமான 45 நிமிடங்களை கொண்டிருக்கும். இரண்டாம் வினாத்தாள் முற்பகல் 10.45 மணிமுதல் நண்பகல் 12 மணி வரைக்குமான 1 மணி நேரம் 15 நிமிடங்களை கொண்டிருக்கும்.

அந்தவகையில் மலையகத்திலும் 22.01.2022 அன்று மலையக மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது. அந்தவகையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவா்கள் மற்றும் ஏனைய பாடசாலை மாணவர்கள் ஆா்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது. அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here