2,535 உதவி ஆசிரியர்களை நியமிக்க அமைச்சரவை அனுமதி!

0
58

” மலையக பெருந்தோட்ட பாடசாலைகளுக்காக ஆசிரியர் உதவியாளர்களாக 2 ஆயிரத்து 535 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.” – என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

“ 863 பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான ஆசிரியர் உதவியாளர்கள் நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன்படி 2,535 பேர் நியமிக்கப்படவுள்ளனர். மாதம் 20 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும்.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இவர்கள் தம்மை பட்டதாரியாக தரமுயர்த்திக்கொள்ள வேண்டும், அவ்வாறு இல்லாவிட்டால் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயிற்சியை நிறைவுசெய்திருக்க வேண்டும். அதன்பின்னர் நியமனம் வழங்கப்படும்.

இதன்மூலம் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.” – எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here