5ஆவது முறையாக மீண்டும் பிரதமரானார் ஷேக் ஹசீனா

0
73

பங்களாதேஷ் பொதுதேர்தலில் தொடர்ந்து 5ஆவது முறையாக ஷேக் ஹசீனா வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகியுள்ளார். முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடுதழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா அறிவித்தார். மேலும், பொதுத்தேர்தல் நடைபெறும் சூழலில் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் செயலி செயலிழந்துள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு மற்றும் தேர்தல் செயலி செயலிழப்பு ஆகியவற்றுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் இன்று தேர்தல் நடைபெற்றது.

பல வன்முறை சம்பவங்களும் நேற்றைய தினம் பதிவாகியிருந்தன.இந்நிலையில், 5ஆவது முறையாக ஷேக் ஹசீனா வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here