சிறுவனின் தாய், சிறுவனை சிறிய தந்தையிடம் ஒப்படைத்து விட்டு வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.மதுபோதையில் 9 வயதான சிறுவனை கொடூரமான முறையில் தாக்கியதாக கூறப்படும் நபரை தாம் கைது செய்துள்ளதாக மீகாதென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் சிறிய தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபர் லிஹினியாவ ஹலவெல்கெலே பிரதேசத்தை சேர்ந்தவர். சிறுவனின் தாய், சிறுவனை சிறிய தந்தையிடம் ஒப்படைத்து விட்டு வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
வெளிநாடு செல்லும் தாய்மார்களுக்காக புதிய சட்டம் அறிமுகம்
சிறிய தந்தை மதுபோதையில் வீட்டுக்கு வந்து சிறுவனை தாக்குவதாக கிடைத்த தகவலையடுத்தே பொலிஸார் நேற்று சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்துள்ள சிறுவன் மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டுள்ள நபர் இன்று மத்துகமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.