நாட்டில் கடந்த 13ஆம் திகதி இரவு 11 மணி முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பயணக்கட்டுப்பாட்டை தொடர்ந்து மலையக நகரங்களின் இயல்புநிலை முற்றாக முடங்கியுள்ளது.
மலையகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான நாவலப்பிட்டி நகரம் வெறிச்சோடி கிடப்பதை காணலாம்.
அத்தியாவசிய சேவைக்காக விசேட அனுமதி பெற்ற வாகனங்கள் மாத்திரமே நாவலப்பிட்டி நகர் ஊடாக பயணிக்கின்றன.