நிலை குலைந்து மைதானத்தில் வீழ்ந்துள்ளார் வீரர் இடைநிறுத்தப்பட்ட போட்டி.

0
111

ஐரோப்பிய கிண்ண காற்பந்து தொடரின் நேற்றைய போட்டியின் போது டென்மார்க் அணியின் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீர் சுகயீனமுற்றதை அடுத்து போட்டி இடைநிறுத்தப்பட்டது.

இந்த தொடரின் நேற்றைய போட்டியில் டென்மார்க் மற்றும் பின்லாந்து ஆகிய அணிகள் விளையாடின.

முதல் பாதி ஆட்டம் நிறைவடைய சில நிமிடங்கள் இருந்தபோது டென்மார்க் அணியின் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென உடல்நிலை குலைந்து மைதானத்தில் வீழ்ந்துள்ளார்.

29 வயதான அவருக்கு மருத்துவக் குழுவினர் மைதானத்தில் சிகிச்சை அளித்த போதிலும் அவரது உடல் நிலை சீராகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவர் தற்போது குணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here