லிந்துலை- தலாவக்கலை நகரசபை தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது

0
86

லிந்துலை- தலாவக்கலை நகரசபை தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி தலவாக்கலை நகரில் மண்டபம் ஒன்றில் கொண்டாட்ட நிகழ்வுகளை முன்னெடுத்த குற்றச்சாட்டில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

119 எனும் பொலிஸ் அவசர துரித இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய தலவாக்கலை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது நேற்று குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை குறித்த நிகழ்வில் பங்கேற்ற மேலும் சிலர் தப்பிச்சென்றுள்ள நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here