ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளதாக காவல்துறையின் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்
வீரகெட்டிய – வெகந்தவெல பகுதியிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 14 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு பலியானதாக மேலும் தெரிவித்துள்ளார்.
ஏன் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது என இதுவரையில் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்