தொழிலாளர் தேசிய சங்கத்தின் பணிமனை உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு

0
87

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமாரின் சொந்த நிதியின் ஊடாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் லிந்துலை,அக்கரப்பத்தனை,டயகம, நுவரெலியா ஆகிய பணிமனைகளில் பணியாற்றுகின்ற முழுநேர உத்தியோகஸ்களுக்கு உலர் உணவு நிவாரணப் பொருட்கள் கொண்ட பொதிகள் கையளிக்கப்பட்டன.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் லிந்துலை பணிமனையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவரும் அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினருமான வேலு சிவானந்தன், அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர் சுதா, கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்களான ரவிச்சந்திரன், நாகேந்திரன், தலவாக்கலை அமைப்பாளர் கிரே, லிந்துலை இணைப்பாளர் உட்பட பணிமனைகளில் உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here