இறக்குமதியான சேதன பசளைகள் பிற மாவட்டங்களுக்கு விநியோகம்.

0
66

அரசாங்க நிறுவனமொன்றினால் கொள்வனவு செய்யப்பட்ட பொட்டாசியம் க்ளோரைட்டு சேதன பசளை  மாவட்டங்களுக்கு விநியோகிப்பதற்காக நேற்று (13) நள்ளிரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த சேதன பசளை மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, அனுராதபுரம், குருநாகல், புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் விவசாய சேவை மையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக 30,000 மெட்ரிக் டன் பசளை லித்வேனியாவிலிருந்து கொழும்புத் துறைமுகத்தை நேற்று (13) வந்தடைந்தது.

இதேவேளை, பெரும்போகத்திற்கு தேவையான பசளை கிடைக்கப்பெறவில்லையென குற்றம் சுமத்தி நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் விவசாயிகளினால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here