தன் அரசியல் லாபத்துக்காக மக்களை வீதிக்கு இறக்கி இழிவுபடுத்த முயற்சிக்கின்றது முற்போக்கு கூட்டணி.

0
75

தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற போர்வையில் மக்களை மக்களை கடைகாய்களாக பயன்படுத்தி கொண்டு தங்களது அற்ப அரசியல் லாபத்துக்காக மக்களை வீதிக்கு இறக்கி பலி வாங்குவதாக இ.தொ.காவின் உபச்செயலாளர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்

நாட்டில் கொரோனா மிகத்தீவிரமாக பாதித்து வருகின்றது. நம் நாடு மட்டுமின்றி முழு உலகமுமே பொருளாத சிக்கலுக்கு முகம்கொடுத்து வருகின்றன. இந்நிலையை மக்கள் அனைவருமே உணர்ந்துள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு மக்களை நடுவீதிக்கு அழைத்து தீர்வு பெற்றுத்தருவதாக கூறி கொட்டும் மழையில் நனையவைத்து போராட்டங்களை முன்னெடுத்துள்ள செயற்பாடு மிக கேவலமானது. இதை ஏற்பாடு செய்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைக்குனிய வேண்டும்.

கொரோனா பேரிடரின் போது இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் களத்தில் இறங்கி மக்களுக்கு சேவை செய்தார் கொரோனா தடுப்பூசிகள் உட்பட உலர் உணவு பொருட்கள் வரை மக்களோடு மக்களாக நின்று மலையக தலைவர் என்பதையும் மக்களை எப்படி காக்க வேண்டும் என்பதையும் நிரூபித்தார். அதை மக்கள் இன்றுவரை மறக்கவில்லை.  ஆனால் கொரோனா காலத்தில் கொழும்பில் ஒழிந்து கொண்டு அரசியல் செய்த திகாம்பரமும் அவர் பங்காளிகளுக்கும் இன்றுதான் மலையகத்துக்கான பாதை தெரிந்துள்ளமை வெட்கக்கேடான விடயமாகும்.

இப்போராட்டம் இதோடு நின்றுவிடாது எவ்வித சுகாதார விதிமுறைகளுமின்றி மக்கள் கூட்டம் காணப்பட்டது.இதனால் தலவாக்கலை போராட்ட கொரோனா கொத்தணி ஏற்பட அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தங்களது சுயலாபத்துக்காக மக்களை பலிகேடாக மாற்ற நினைக்கும் இவ்வாறான அரசியல் வாதிகளை மக்கள் ஓட ஓட விரட்டுவார்களென இ.தொ.கா உபச்செயலாளர் சச்சுதானந்தன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here