இன்று காலை 9.00 மணியலவில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட டயகம தொடக்கம் வோல்புரூக் வரையிலான க.பொ.த.சா/த, உயர்தர பாடசாலை மாணவர்களுக்கு வோல்புரூக் தமிழ் மகா வித்தியாலயத்தில் முதலாவது கொரோனா தொற்று தடுப்பூசி இன்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளது.
லிந்துலை பொது சுகாதார பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து 16_19 வரையிலான பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொது சுகாதார பணிப்பாளர் வைத்தியர் தெரிவித்தார்.
பா.பாலேந்திரன்