நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் ஊடான வருடாந்த வேலைத்திட்டத்தின் கீழ் “கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளில் நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு கா.பொ.த உயர்த்தரத்தில் உள்ள அனைத்து பாடங்களுக்குமான வினாத்தாள்கள் உரிய பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நுவரெலியா பிரதேச சபையின் செயலாளர், கல்லூரியின் அதிபர், பாடசாலையின் ஆசிரியர் குழாம் மற்றும் நுவரெலியா பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
நீலமேகம் பிரசாந்த்